யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது, முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்து சோதனை செய்தபோது , அதற்குள் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து , முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த இளைஞனை கைது செய்து , கைது செய்த இளைஞனையும் , முச்சக்கர வண்டி மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா என்பவற்றை மேலதிக நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.












