பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 90ஆயிரத்து 830பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டாயிரத்து 736பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 17இலட்சத்து 431பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு இலட்சத்து 85ஆயிரத்து 136பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 28ஆயிரத்து 238பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 87ஆயிரத்து 57பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

















