மருதங்கேணி பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 23:40 மணியளவில், கடற்படையின் P-483 மற்றும் CG-402 ஆகிய டோரா ரோந்து படகுகள் மூலம் கட்டக்காடு கடல் பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சட்டவிரோத மின்விளக்குகளை (Light Course) பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று படகுகள் மற்றும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்தவர்களும் மற்றய நபர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் என்றும் தெரியவந்துள்ளது .
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், இன்று அதிகாலை 02:00 மணியளவில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
சட்டவிரோத மீன்பிடி முறைகளால் கடல் வளம் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 03 டிங்கி படகுகள், இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளன.
கடற்படையினரின் தீவிர கண்காணிப்பால் இந்த கைது நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















