தெஹ்ரான், ஈரானின் பல பகுதிகளில் உள்ள பல எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து சனிக்கிழமையன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்கின.
இஸ்லாமிய குடியரசின் எண்ணெய் வசதிகள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
தெஹ்ரான் மற்றும் அருகிலுள்ள நகரமான கராஜ் மீது தாக்குதல்கள் நடந்த பின்னர், சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் பாரிய தீப்பந்தங்கள் மற்றும் அடர்ந்த புகை வானத்தில் எழுவதைக் காட்டின.

தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் உள்ள பல எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் குறிவைக்கப்பட்டதாக ஈரானின் எண்ணெய் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் உள்ள பல எரிபொருள் சேமிப்பு தளங்கள் மற்றும் எரிசக்தி வளாகங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த இடங்கள் ஈரானின் ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுவதாக அது கூறியது.
இஸ்ரேலிய இராணுவம் இதை அரசாங்கத்தின் ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பை தகர்ப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க தாக்குதல் என்று விவரித்தது.
அதேநரேம், சனிக்கிழமை இரவு தெஹ்ரான் முழுவதும் ஏற்பட்ட வெடிப்புகள் குடியிருப்பாளர்களை உலுக்கின.
நாட்டின் மிகவும் பரபரப்பான உள்நாட்டு பயண மையமான மெஹ்ராபாத் விமான நிலையத்தில் இஸ்ரேலியர்கள் நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
விமான நிலையத்திலும் எரிபொருள் கிடங்கிலும் ஏற்பட்ட வெடிப்புகள் பல மைல்கள் தொலைவில் உள்ள வீடுகளை உலுக்கியது.














