யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நள்ளிரவில் நகை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சுமார் 5 பவுண் நகையினை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுத்ததுடன் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளதுடன் அரை மணி நேரதிற்கு அதிகநேரம் மணல் மண் அள்ளி கொட்டியும், இரும்பாலும் தாக்கியுள்ளனர்.
இதில் கணவர் படுக்கயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சுதாகரித்து கொண்ட கணவர் திருடன் ஒருவனை தாக்கியத்தில் திருடன் காயத்துடன் இரத்தம் சிந்த சிந்த தப்பி சென்றுள்ளார்.
இதேவேளை திருடர்கள் கத்தி முனையில் தாக்கியும் அச்சுறுத்திக்கொண்டிருந்த நிலையில் மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும் பொலிஸார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு உதவுவதற்கும் முறைப்பாடு பெற்றுக்கொள்ளவும் சென்றுள்ளனர் .
குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவத்தில் 3 கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை காணொளியில் பதிவாகியுள்ளது .












