பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாண்டல்சன் கோப்புகள்’ (Mandelson files) விவகாரம் குறித்து பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.
பிரித்தானிய பிரதமரின் ஆலோசகர் லார்ட் மாண்டல்சனுக்கும், பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையிலான நட்பு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், அவற்றை மீறி மாண்டல்சன் பணியமர்த்தப்பட்டதை அண்மையில் வெளியான ரகசியக் கோப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தப் பாதுகாப்பு சோதனைகள் “விசித்திரமான முறையில் அவசரகதியில்” செய்யப்பட்டதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாண்டல்சனுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்பை பிரதமர் ஆரம்பத்திலிருந்தே தெரிந்தே மறைத்துள்ளார் எனவும் அவர் உண்மையைச் சொல்லவில்லை எனவும் அவரை இனி நம்ப முடியாது எனவும் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனச்சாட்சியின்படி சிந்தித்து, இந்த மனிதர் நாட்டை ஆளத் தகுதியானவரா என்று கேள்வி எழுப்ப வேண்டும்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனாக் (Kemi Badenoch) கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்நிலையில் ஸ்டார்மர் பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என ரிபார்ம் யுகே கட்சியின் துணைத் தலைவர் (Richard Tice) ரிச்சர்ட் டைஸ், தெரிவித்துள்ளதுடன் அக்கட்சியின் (Zia Yusuf) ஜியா யூசுப், ஸ்டார்மர் பெயரளவில் மட்டுமே பிரதமராக இருப்பதாகவும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, லிபரல் டெமோக்ராட் கட்சி, பசுமைக் கட்சி (Green Party) மற்றும் முன்னாள் லேபர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் ஆகியோரும் ஸ்டார்மரின் பதவி விலகலைக் கோரியுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தீர்மானத்தின் ஊடாகவே இந்த ஆவணங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
ஆவணங்களில் நேரடியான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டாலும், பிரதமரின் நம்பகத்தன்மைக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.












