குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் இன்று (03) காலை குறிவைக்கப்பட்டுள்ளன.
இதனால் விமான நிலையத்தின் அவசரகாலத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், வரும் விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டதாகவும், விமான நிலையத்தின் பல வசதிகள் கடுமையாக சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் குவைத் ஆயுதப் படைகள் தெரிவித்தன.















