மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தை பிலேற்றால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (7) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 12 மணியளவில் குறித்த இளைஞன் தனது கழுத்தை பிளோற்றினால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது படுகாயமடைந்த நிலையில் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.














