கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21) ஆம் திகதி நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் , அங்கு வருகைதந்த இனொரு தரப்பினருடன் ஏற்பட்ட மோதலின் போது, தனது கைத்துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.













