குயின்ஸ்பெரி ஆற்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு
In இலங்கை November 7, 2018 10:27 am GMT 0 Comments 1646 by : Yuganthini
நுவரெலியா, குயின்ஸ்பெரி பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் குயின்ஸ்பெரி பகுதியிலுள்ள 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசன் அரிகிருஷ்ணசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை வீட்டிலிருந்து சென்ற இவர் இரவு வரை வீடு திரும்பாதமையால் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ஆற்றில் சடலமொன்று மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சென்று பார்த்தபோது, அவர் இறந்த நிலையில் காணப்பட்டதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.