பெரு மற்றும் சிலியில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!
கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற காலநிலை காரணமாக பெரு மற்றும் சிலியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அந்த பிராந்தியத்தில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக பாதைகளும், பொது இருப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
சிலியின் அட்டகாமா பிராந்தியத்தில் இக்குவிக் பகுதியில் குடியிருப்புகள் வௌ்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
சில பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பால் பொருட்கள் போன்ற உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் உள்ளது.
இந்தநிலையில், சீரற்ற காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புகள் சுமார் 90 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சிலியின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.