News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி!
  • நிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
  • பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்!
  • இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!
  • இந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை

தரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி

அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களின் நீண்டகால பயன்பாட்டிற்கு உதவுவதாக அமைவது அவசியம். அதனை விடுத்து, குறுகிய கால திட்டங்கள் எவ்வித பலனையும் கொடுக்காது.

அந்தவகையில், வடக்கின் அபிவிருத்தி பூச்சியத்திலிருந்து அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய தரத்துடன் அமைக்கப்படாமை தொடர்பில் இன்றைய ஆதவனின் அவதானம் ஆராய்கின்றது.

கிளிநொச்சி கோணாவில் வீதியிலிருந்து ராஜன் குடியிருப்பிற்கு செல்லும் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலமே இது.

குறித்த பாலம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் இவ்வாறு சேதமடைந்துள்ளமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச சபையின் கண்காணிப்பில் இந்த பாலம் அமைக்கும் பணி இடம்பெற்றுள்ளது. எனினும், பாலம் அமைக்கும்போது ஏற்பட்டுள்ள தரக்குறைவுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தாமை தொடர்பாக மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மக்களின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக கரைச்சி பிரதேச சபைத் தலைவர் அ.வேலமாலிகிதனை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.

பாலத்தின் ஒரு நீர்போக்கி குழாய் மாத்திரமே உடைந்துள்ளதாக குறிப்பிட்ட கரைச்சி பிரதேச சபை தலைவர், அதனை புனமைக்க அத்திவாரம் இடப்பட்டுள்ளதாக கூறினார்.

கடும் மழை காரணமாகவே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கரைச்சி பிரதேச சபைத் தலைவர், 9 இலட்சம் ரூபாய் செலவில் தற்போது அதன் நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதாக எம்மிடம் தெரிவித்தார்.

கோணாவில் யூனியன்குளம் குடியிருப்பு சனசமூக நிலையத்திடம் இதற்கான ஒப்பந்தம் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டதாக கரைச்சி பிரதேச சபைத் தலைவர் குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்குள் இந்த பாலத்தை கட்டவேண்டுமென ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறித்த மூன்று மாதங்களுக்குள் பாலம் கட்டப்படுகின்றதாக என்பதை ஆதவனின் அவதானம் தொடர்ந்தும் அவதானிக்கும்.

0 Shares
  • Facebook
  • Twitter

 

Related Videos

மாசடையும் யாழ்ப்பாண குளங்கள்

ஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்

நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு?

அபிவிருத்தி செயற்பாடுகளில் அசமந்தம்!

கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது

மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்

அழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்

தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்!

நோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்

போதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு!

மழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை!

பேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்


  • <
  • 1
  • …
  • 4
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.