பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி ட்ரம்ப்பே காரணம் – சட்டமா அதிபர்
In அமொிக்கா November 8, 2018 4:03 pm GMT 0 Comments 1447 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதால் தான், பதவியை இராஜினாமா செய்ததாக, அந்நாட்டின் சட்டமா அதிபர் ஜெப் செஸன்ஸ் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இருந்து ஜெப் செஸன்ஸ் தன்னை விடுவித்து கொண்டார்.
இதன் பின்னரும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அதிருப்தியடைந்த அவர் நேற்று (புதன்கிழமை) பதவி விலகினார்.
குறித்த இராஜினாமா கடிதத்தை திகதி குறிப்பிடப்படாமல் அனுப்பிய அவர், ட்ரம்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதாக ஜெப் செஸன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.