மட்டக்களப்பு குண்டுவெடிப்பு – 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு(2ஆம் இணைப்பு)
In இலங்கை April 21, 2019 5:18 am GMT 0 Comments 2194 by : Dhackshala
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் -5இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சியோன் தேவாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கொழும்பிலுள்ள இரண்டு தேவாலயங்கிளிலும் வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்திருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.