Updated: 10:21 GMT, Oct 29, 2017 | Published: 10:20 GMT, Oct 29, 2017 |
0 Comments
1280
இலங்கையின் மலையக பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான, ஒரு தொகுதி உறுதிப் பத்திரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன.
ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்தார்.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக, இன்றைய தினம் 2864 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது, மலையக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், வேலுகுமார், கே.கே.பியதாஸ, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
