சிறைக்கைதிகளின் பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை
குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.