இந்தோனேஷியாவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென்பதுடன், இது தொடர்பான சேத விவரங்கள் இதுவரையில் தெரியவரவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறிருக்க, கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் சிக்கி ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.